May 7, 2015

இளவேனில்


வெண்பா - வாழ்த்து
*******************************

சித்திரைத் திங்களிலே செங்கமலம் நீபிறந்தாய்
கத்திரி வெம்மைத்தீக் கங்/கொத்/த வெப்பத்தால்
நித்திலமே கார்வண்ணம் நீயுற்றாய் என்றாலும்
பித்தேற்றும் பேரெழில் பூ.

பெட்டைக் குழந்தையென பெண்தாதி சொல்லிடவும்
மட்டற்ற பேரின்பம் மண்ணுலகைச் சூழ்ந்ததம்மா
பட்டுப் பதுமையே பைந்தமிழில் பேருனக்கு
இட்டோம் ‘இளவேனில்’ என்று.


ஞால மொழிகளில் நான்கேனும் கற்றுக்கொள்
காலத்தின் போக்கைக் கணிக்கும் திறமும்கொள்
ஆலம்போல் நீண்டநல் ஆயுள் நிலைத்துநீ

வாழ வழங்குகிறேன் வாழ்த்து.

*

06/05/2015- எங்கள் இளையமகள் இளவேனிலுக்கு மூன்றாம் பிறந்த நாள்.


No comments:

Post a Comment

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.