Nov 21, 2014

நதிமூலம்

நீங்களெல்லாம் ஒன்றுகூடி
துயரம் பகிர்ந்து
அடக்கம் செய்துவிட்டு களைந்துபோன பின்
வெளி, இருள்
ஒளி
நெருப்பு, நீர்
உயிர்
மண், மலை
விலங்கு
மரம், காற்று
பறவை
வான், கோள்
விண்மீன்
இவையாவும் ஒன்றுகூடி வந்து
என்னை
பங்கிட்டுக் கொள்ளும்

கருவறைக்குத் திரும்பிய
களிப்பில் இருப்பேன்
நான்

*


2 comments:

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.