Dec 21, 2010

இப்பொழுது நான்...



முறுக்கேறிய நாண்
நான்.

உன்
கை விரல்கள்
மீட்ட வேண்டியதில்லை
கால் கொலுசின்
ஓசை பட்டாலே
இசைப்பொழிய
இசைந்திடுவேன்.

~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~

முற்றிய மூங்கில் காடு
நான்.

தீப்பொறி விழவேண்டியதில்லை.
உன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்.


~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~~




வரண்ட தரைக்குள்
புதைந்திருக்கும் புல்லின் வேர்
நான்.

உன்
பேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்

பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!





Dec 16, 2010

முள்ளிடைப் பூக்கள்



இதழ்க்கிளை
இடுக்கில்
எச்சில் ஊறவைக்கும்

மகரந்தகுழல்..!



~~~~~~~~~~~ *~~~~~~~~~~~


உன்
சொல்லிடை
சிரிப்பினை
நினைவூட்டும்

இம்
முள்ளிடைப் பூக்கள்!

Dec 8, 2010

இது எத்தனையாவது நாள்...?


இது எத்தனையாவது
நாளென நினைவில் இல்லை.

காற்று மட்டும் புக இடைவெளி
காது கூசாத சொல் தேடி உரையாடல்
மெல்லிய தூரல்
விரைந்து நடக்க
விரும்பாத கால்கள்
நனைந்திருந்தது உடை
பெருந் தீ யின்
முதல் பொறி
முளைவிடத் தொடங்கியிருந்தது...!


**********

சிறுவயதில்
எத்தனையோ முறை
சொல்லியிருக்கிறாள் அம்மா.
எச்சில் பண்டம்
யார் கொடுத்தாலும்
தின்னக்கூடாதென.!

இருவது வருடப்
பசியுடன் இருக்கிறேன்.
முதல்முறை
முத்தம் தின்னக் கொடுக்கிறாய் நீ
வேண்டாமெனச் சொல்ல
விரும்புமா மனம்...?


Dec 1, 2010

குமிழ்த்திரை


காதல் தீ

சுடும் என்றேன்.
சுட்டாலும்
“உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா ” என்றாய்.

இதோ
பற்றி எரிகிறது பார் என்கிறேன்
“பிடில் வாசி போடா” என்கிறாய்.



நீர்க்குமிழ்.

உள்ளுக்குள்  நீ
வெளியில் நான்
அப்படியே இருந்திருக்கலாம்!

குமிழ்த்திரை  உடைத்து
உன்னில் என்னை
நிரப்பி  நிரைத்தாய்

நிரைந்திருந்தோம்.

உறவுகள் மறுப்பதால்
உயிரிருந்தும்
சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!


கஜல்
விருத்தங்கள் எழுத
கசங்கிய காகிதத்தை
மெளனமாய்
பிரிக்கிறேன் நான்...!



.